ஒக்கலிக கவுடர் இன அரசர் கெம்பே கவுடர் குறித்து மாவட்ட அளவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி சிறப்பாக கொண்டாட வேண்டும்....
இளைஞர் படைகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக ஒக்கலிக கவுடர் மகாஜன சங்கம் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தனியார் மண்டபத்தில் ஈரோடு மாவட்டம் ஒக்கலிக கவுடர் மகாஜன சங்கம் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு ஈரோடு மாவட்ட தலைவர் வேலுமணி தலைமையில் மாநில துணைத்தலைவர் வி என் கே குப்புராஜ் முன்னிலையில் நடைபெற்றது.
ஒக்கலிக கவுடர் இன அரசர் கெம்பே கவுடர் குறித்து மாவட்ட அளவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி சிறப்பாக கொண்டாட வேண்டும்....
ஈரோடு மாவட்டம் ஒக்கலிக கவுடர் மகாஜன சங்க அலுவலகத்திற்கு என நிலம் வாங்கி அதில் சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் ....
இதற்கு சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் இனத்தினர் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெரும் மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்..
ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு நகரம் ஒன்றியம் மற்றும் கிராமப்புறங்களில் கிளைகள் அமைத்து உறுப்பினர்களை அதிகப்படுத்த வேண்டும்
இளைஞர் படைகளுக்கு சங்கமூர்த்த நிர்வாகிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக ஒக்கலிக கவுடர் மகாஜன சங்கம் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் கொத்தமங்கலம் மகேஷ், புஞ்சைபுளியம்பட்டி சேர்ந்த மயில்சாமி, கனகராஜ் மற்றும் ஈரோடு மாவட்டம் நகர ஒன்றிய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
சத்தியமங்கலம் செய்தியாளர்
மகேஷ்பாண்டியன்