சத்தியமங்கலம் அருகே அருள்மிகு ஒரு கோடி சிவலிங்க ஆலயத்தில் காசி விஸ்வநாதர் சிவலிங்கம் பிரதிஷ்டை விழா நடைபெற்றது.

Date: 2024-12-02
news-banner
   சத்தியமங்கலம் அருகே அருள்மிகு ஒரு கோடி சிவலிங்க ஆலயத்தில் ஒரு லட்சத்து எட்டு (100008)காசி விஸ்வநாதர் சிவலிங்கம்
பிரதிஷ்டை விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தனவாசி கரடு அருகே அமைந்துள்ளது அருள்மிகு ஒரு கோடி சிவலிங்க ஆலயம் இந்த ஆலயத்தில் பஞ்ச முக நாகலிங்கம் மற்றும் சிவன் பார்வதி உடன் சிவன் சிலை மற்றும் விநாயகர்,முருகன்,காலபைரவர் , சனீஸ்வரன், கருப்புசாமி சிலைகள் உள்ளன.

மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி மற்றும் சிவராத்திரி, ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடைபெறும்.

இந்த வழிபாட்டில் ஈரோடு கோவை திருப்பூர் மற்றும் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுவார்கள்.

இந்த ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல்  1 மணி வரை கொண்ட ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயரம் கொண்ட ஒரு லட்சத்து எட்டு (100008) காசி விஸ்வநாதர் லிங்கங்க சிலையை கிரேன் மூலம் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.முன்னதாக ஆலயத்தில் உள்ள விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்து பால் மற்றும் தீர்த்த குடத்தை மேள தாளம் முழங்க எடுத்து சென்று 18 அடி உயரம் கொண்ட காசி விஸ்வநாதர் சிலைக்கு அபிஷேகம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அனைத்து சிவனடியார்களும், பக்த கோடிகளும், பொதுமக்களும்  என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..
இதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

சத்தியமங்கலம் செய்தியாளர்  
மகேஷ்பாண்டியன் 
image

Leave Your Comments