அருள்மிகு மொடச்சூர் தான்தோன்றி அம்மன் திருக்கோயில் மலர் பல்லாக்கு திருவிழா
திருவிழாவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது விழாவில் மொடச்சூர் கொங்கு நண்பர்கள் சார்பில் கிராமிய கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது நிகழ்ச்சியில் திருப்பூர் கொங்கு வேளாளர் சார்பில் வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு கோபி நகர மன்ற தலைவர் என் ஆர் நாகராஜன் அவர்கள் தலைமை வகித்தார்கள் மேலும் அறங்காவலர் குழு தலைவர் முத்துவேலப்பன். சாமுண்டீஸ்வரி பெர்டிலைசர்ஸ் உரிமையாளர் சோமு நகர மன்ற உறுப்பினர் விஜயகுமார் கே என் ராமசாமி முன்னாள் நகர மன்ற உறுப்பினர் எம் என் பி சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர் அந்தியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாசலம் திருக்கோயிலுக்கு வருகை புரிந்தார் அவருக்கு நகர்மன்ற தலைவர் என் ஆர் நாகராஜன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார் விழாவிற்கு ஆன ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் மற்றும் திருக்கோவில் அபிமானிகள் மற்றும் கொங்கு வேளாளர் நற்பணி மன்றத்தினர் சிறப்பாக செய்தனர்.