தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் மாநிலம் தழுவிய மாபெரும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் கோபியில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தொடக்க கல்வி துறையில் பணிபுரியக்கூடிய 90% ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பு பறிக்கக் கூடிய மாநில முன்னுரிமையை வலியுறுத்தும் அரசாணை எண் 243 உடனடியாக ரத்து செய்ய வேண்டும்
கடந்த 12 10 2023ல் மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர்,
மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோர் டிட்டோஜாக் ஒயர் மட்ட குழு உடன் நடத்திய பேச்சுவார்த்தையில் வாய்மொழியாக ஏற்றுக் கொண்டு காணொளி மற்றும் அச்சு ஊடகங்களுக்கு தெரிவித்தEMIS உள்ளிட்ட 12 கோரிக்கைகள் தொடர்பான எழுத்துப்பூர்வமான ஆணைகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்
ஆர்ப்பாட்டத்தில் மகாதேவர் செல்வம் வரவேற்புரை நிகழ்த்த கோரிக்கை முழக்கம் எழுப்ப ரமா ராணி எழுச்சியுரை ஆற்றினார் ஆர்ப்பாட்டத்தில் கோபி ஒன்றியத்தை சார்ந்த ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்