சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கபடி போட்டி பரிசு வழங்கும் விழா
சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கபடி போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ளது . இந்த பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கால்பந்து, கபடி,செஸ், ஹாக்கி ஆகிய விளையாட்டுகளை உடற் கல்வி ஆசிரியர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர் .
கபடியில் ஆர்வமுள்ள 6ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கிடையே கபடி போட்டி நடைபெற்றது. இதில் முதல் பரிசாக தங்கமெடல் இரண்டாம் பரிசாக வெள்ளி பதக்கம் மூன்றாம் பரிசாக வெண்கல பதக்கம் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் பாலு தலைமையில் வெற்றி பெற்ற அணியை சேர்ந்த மாணவர்களுக்கு மெடல்களை வழங்கினார்.
இதில் உடற் கல்வி ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.